Friday 29 April 2016

பால குலம்

"பால குல வங்கிஷம்"

என்று வீரச்சோழன் பட்டையத்திலும்
சோழியாண்டர் பற்றிய மெக்கன்சி குறிப்பிலும் வரும்

அவர்களை அவ்வாறு கூற என்ன காரணம் இதற்கு என்ன பொருள் என்று தெரியாமல் பல வரலாற்று ஆசிரியர்கள் தங்கள் மனம்போன போக்கில் எழுதுகிறார்கள் ஆனால் உண்மை அதுவல்ல

உதாரணம்

தூவராபாலகர்கள் என்று கூறுவோம் அதற்கு வாயிற்காவலர்கள் என்று பொருள்

அஷ்டதிக்கு பாலகர்கள் என்று கூறுவோம் அதற்கு எட்டுதிசைகளை காப்பவன் என்று பொருள்

பாலபண்டியன் பற்றி கூறும் திருமங்கை ஆழ்வார் "பாலித்து அருளியதால் அவன் பால பாண்டியன்" என்று அழைக்கப்பட்டான் என்று கூறுவார் பாலித்தல் என்றால் காத்தல் என்று பொருள்

ஆக பால என்றால் காத்தல் என்று பொருள்

இதனை தமிழ் லெக்சிகன் அகராதி மற்று வேறுஅகராதிகள் என எதில் தேடினாலும் காப்பவன் என்று பொருளையே கூறுகிறது

நாட்டையும் மக்களையும் காக்கும் குலம் என்ற பொருளில்தான் "பால குல வங்கிஷம்" என்று கூறுகிறார்கள்

வங்கிஷம் என்றால் வம்சம் என்று பொருள்



No comments:

Post a Comment