Wednesday 19 February 2014

பனை மரங்கள்



ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீர் மேலாண்மையில் நம் முன்னோர்கள் சிறந்து விளங்கினர். அவர்கள் அவர்களுடைய தேவைக்கு மட்டும் எந்த காரியத்தையும் செய்யவில்லை, அவர்களுடைய சந்ததிகள் இந்த பூவுலகில் வாழும் வரை பயன்பெற எண்ணியே அனைத்து காரியங்களையும் செய்தனர்.

அவர்கள் பல குளங்களை வெட்டினார்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும், ஆனால் குளங்கள் வெட்டப்படுவதால் மட்டும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விடாது. இதனை உன்னிப்பாக கவனித்த அவர்கள் குளத்தை சுற்றியும் பல ஆயிரம் பனைமரங்களை நட்டு வளர்த்தனர்.

இதன் காரணம் என்னவென்றால் பனைமரத்தை தவிர அனைத்து மரங்களின் வேர்களும் பக்கவாட்டில் மட்டுமே பரவும் ஆனால் பனைமரம் மட்டும் செங்குத்தாக நிலத்தடி நீர் வழிப்பாதையை தேடிச்செல்லும். அதுமட்டுமில்லாமல் தனது வேரை குழாய் போன்று மாற்றி தரைப்பகுதியில் உள்ள நீரை நிலத்தடி நீர்ப்பாதைக்கு கொண்டு செல்லும்.

இதனால் அனைத்து நிலத்தடி நீர் வழிப்பாதையிலும் நீர் நிரப்பி அது உற்றாக அருகில் உள்ள ஆறுகளில் மட்டுமில்லாமல் பல் நூறு மைல்கள் அப்பால் உள்ள ஆறுகளிலும் பெறுக்கெடுத்து வற்றாத ஜிவ நதியாக ஓட வழிவகை செய்யும்...

இந்த பனைமரங்களை வெட்ட வெட்ட ஒவ்வொரு நதியாக வறண்டு கொண்டேவரும் என்பது மட்டும் உண்மை... நதிகளை காப்பாற்ற பனைமரங்களை வெட்டுவதை தவிர்க்கவும். குறைந்தபட்சம் உங்கள் நண்பர்களுடனாவது பகிர்ந்துகொள்ளுங்கள்.

படம்: சேவூர் குளத்தை சுற்றி நம் முன்னோர்களால் வைக்கப்பட்ட பனைமரங்கள்.

கடவுள்


 
நான் இடும் வரலாறு மற்றும் முன்னோர்களின் பெருமைகளை பற்றிய பதிவுகளை படித்த முகநூல் நண்பர் ஒருவர் என்னுடன் உள் டப்பியில் வந்து பல விவரங்களை கேட்டு தெரிந்துகொண்டார். அப்போது அவர் கடவுள் என் கண்களுக்கு தெரிவதில்லை, அவர் குரல் எனக்கு கேட்கவில்லை அதனால் கடவுள் இருக்கிறார் என்பதை என்னால் எற்றுக்கொள்ள முடியாது என்றார்.

# கோவையிலிருந்து சென்னையிலிருக்கும் ஒருவருக்கு கைப்பேசியில் பேசுவதை சேலத்திலிருக்கும் ஒருவர் என் கண்களுக்கு தெரியவில்லை காதுகளுக்கும் கேட்கவில்லை அதனால் அவர்கள் இருவரும் பேசிக்கொள்ளவில்லை என்று கூறுவது எவ்வளவு பெரிய முட்டாள்த்தனமோ அதுபோன்றதுதான் இவருடைய வாதமும்... இன்று எவ்வாறு சிம் கார்ட்டும் செல்போனும் செயல்படுகிறதோ அதே தத்துவம் தான் நம் முன்னோர்களாள் ஏற்படுத்தப்பட்ட கோவில் சிலைகளும், யந்திரங்களும் செயல்படுகிறது... கோபுரம் என்பது டவர் போன்றது, ஆனால் நம் முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்ட இந்த தத்துவத்தால் எந்த சிட்டுக்குருவியும் சாகவில்லை யாருக்கும் புற்றுநோயும் வரவில்லை...

பள்ளி



பல்லாயிரம் வருடங்களாக நம்முடன் கலந்து இருந்த ஒன்றை திட்டமிட்டு பிரித்தனர் ஆங்கிலேயர்கள். நம்மவர்கள் சகல துறைகளிளும் வல்லவர்களாக திகழ்ந்தனர். அப்போது, எப்படி தனி ஒரு மனிதன் அனைத்து துறைகளிலும் மிகவும் தேர்ச்சி பெற்று விளங்கமுடிகிறது என்று தீவிரமாக ஆராயத்தொடங்கினான். அதனால் நம் கல்வி முறையை மிக உன்னிப்பாக கவனிக்க தொடங்கினார்கள்.

தற்பொழுது போன்று துறைக்கு ஒன்று தெருவுக்கு ஒன்று என்று கல்வி நிலையங்களை நடத்தி மனனம் செய்யும் மக்குகளை உருவாக்கவில்லை.

ஒரே ஒரு ஆசிரியர்(குரு) அனைத்து துறைகளிளும் மிக நுட்பமான அறிவுடன் தனது அனைத்து மாணவர்களுக்கும் கற்றுக்கொடுத்தனர்.

சுதந்திரம் கொடுத்தும் நாம் பல நூற்றாண்டுகள் அவர்களுக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்று எண்ணிய அவர்கள், மெக்காலே கல்வி முறையை நம்முள் திணித்தனர்.. நம் பாரம்பரிய கல்வி முறையை ஒழித்தனர்.. நம் வரலாற்றை ஆய்வுசெய்கிறேன் பேர்வழி என்று நம் பல நூல்களை நமக்கே கிடைக்காமல் செய்துவிட்டனர்.

நமது பல ஓலைச்சுவடிகளை ஆராய்ச்சியின் பெயரால் திருடி ரகசியமாக தொகுத்து the secret என்ற புத்தகத்தை உருவாக்கினர்... இந்த புத்தகத்தை இன்று வரை பாதுகாத்து வருகிறார்கள்.
அவர்களுடைய பல கண்டுபிடிப்புகள் இங்கே இருந்து சென்றதுதான்.. அவை அனைத்தும் நமது கண்டுபிடிப்புகளே..ஆனால் காப்புரிமை அவர்களுக்கு...

முன்னூறு ஆண்டுகள் அடிமைப்பட்டு நமது மூவாயிரம் ஆண்டுகளாக வைத்திருந்த பொக்கிஷங்களை இழந்துவிட்டோம்...

அதற்கு அவர்கள் போட்ட அஸ்திவாரம்தான் பள்ளிக்கல்வி முறை.. இந்த படத்தில் உள்ள பள்ளிக்கூடம் தான் இந்தியாவில் முதன் முதலில் கட்டப்பட்ட பள்ளி...
இதை நினைத்து பெருமைப்படுவதா வெட்கப்படுவதா என குழம்பி போயிருக்கிறேன் நான்...

இடம் : சேவூர். சாலைப்பாளையம்
more details about seur: http://sevurwar3.blogspot.in/

நாட்டு மாடு




ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாம் அனைத்து துறைகளிலும் எப்படி சிறந்து விளங்கினோம் என்பதையும்,

நம் முன்னோர்களின் வீரம், அறிவு, திறமை போன்றவை நமக்கும் வரவேண்டும் என்றால் நாட்டு மாட்டின் பால் மட்டுமே குடிக்க வேண்டும்....

நாட்டு மாட்டின் முக்கியத்துவத்தை இந்த படத்தை கவனித்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.....

இந்த நாட்டு மாட்டிற்க்கு யார் இதை கற்றுகொடுத்தார்கள்...

சாதி

சாதி என்பது ஏற்றதாழ்வை வெளிப்படுத்துவதற்கு அல்ல அது ஒரு கூட்டு வாழ்க்கை கொள்கை.,., சமுதாயத்தின் அலகு.,.,

மன்னாராட்சி காலத்தில் காணியாட்சி முறை அமலில் இருந்தாது, ஒரு தகுதி பெற்ற காணி எண்பது 18 சாதியும் அந்த காணியில் இருக்க வேண்டும் அவ்வாறு இருந்தால்தான் அது தகுதிபெற்ற காணியாகும் அதன்பிறகே அங்க காணியாளர் நியமிக்க பட்டு நிர்வாகம் செய்யப்படும். அவ்வாறு நிர்வகிக்கப்படும் காணிகள் அனைத்தும் தன்னிறைவு பெற்றே இருந்தாது, அவர்கள் எந்த ஒரு பொருட்களுக்கும் வேறு யாரிடமும் கையேந்தமாட்டார்கள்.,.,

இந்த முறையை ஒழித்தாலே நாம் வெள்ளையர்கள் சார்ந்து இருப்போம் என்பதை உணர்ந்த வெள்ளையர்கள் உயர்ந்த சாதி தாழ்ந்த சாதி என்ற விதையை விதைத்தான் அதில் விளைந்தாதுதான் திருட்டு திராவிட கும்பல், எப்பொழுதுமே அறுவடை செய்பவனை விட விதைப்பவனே அறிவாளி. அதை தெரியாமல் அறுவடை செய்பவர்கள் முட்டாள்கள், இப்ப சொல்லுங்க யார் முட்டாள் என்று ., யார் பகுத்தறிவாளர்கள் என்று., இவன்கள் நம் முன்னோர்களை முட்டாள்கள் என்கிறார்கள் மானங்கெட்ட அடி முட்டாள்கள்

வானவியல் சாஸ்திரம்



 


ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் வானவியல் சாஸ்த்திரத்தில் சிறந்து விளங்கினார்கள் என்று அனைவரும் அறிந்த ஒன்றே. அதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால், பிரபஞ்ச இயக்கத்தின் கொள்கைகளை தற்போதைய அறிவியல் அறிஞர்களை விட மிக துள்ளியமான கணித அளவிடுகளுடன் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தி வைத்துவிட்டு சென்றுள்ளனர்கள் நம் முன்னோர்கள்.

சீனா, லாஸ், திபத் ஆகிய நாடுகள் ஒன்று சேர்ந்து திபத்தில் நடத்திக்கொண்டு இருக்கு ஆய்வின் போது அவர்களுக்கு பல ஆவணங்கள் கிடைத்தது. ஆனால் அவை அனைத்தும் சமஸ்கிருதத்தில் இருந்த காரணத்தால் அதை மொழி பெயர்க்க சத்தீஸ்கரில் உள்ள ஒரு பழ்கலைகழகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

அதை மொழிபெயர்த்த ரய்னா என்னும் பேராசிரியர் கொடுத்த விளக்கம் மிக ஆச்சரியம் மிக்க தகவலாக இருந்தது. அவற்றின் நீளம் கருதி சுருக்கமாக சொல்லி முடிக்கிறேன்.,.

அந்த ஆவணத்தில் விமானம் இயங்கும் தத்துவங்களும் பிரபஞ்சத்தில் உள்ள கோள்கள் மற்றும் நட்டத்திரங்களின் இயக்கம் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது பிரபஞ்சம் என்பது ஹீலியம் மற்றும் ஹைட்ரஜன் நிரம்பிய ஊடகமாக உள்ளது இதே தத்துவத்தை பயன்படுத்தி பல விமானங்கள் இயக்கமுடியும் என்றும் அத்துடன் சில கணித விகிதாச்சார அளவிடுகளும் கொடுக்கப்பட்டுள்ளது…
ஆவணங்கள் முழுமையாக கிடைக்கும் பட்சத்தில் விமானங்கள் பற்றிய இன்னும் பல தகவல்கள் வெளியாகும்,

இவை அனைத்தும் நம் புராணங்களில் கடவுள் காற்றில் பறந்து வந்தார், ராமணன் சீதையை விமானத்தில் இலங்கைக்கு கடந்திச்சென்றான் என்று படித்துள்ளோம். ஆனால் அவை அனைத்தும் கட்டுக்கதைகள், கற்பனையே என்று வாதிட்டது இந்த திருட்டு திராவிட கும்பல்கள்,
ஆனால் இன்று வரை இந்த திருட்டு திராவிட கும்பலின் புரட்டு வரலாற்றைத்தான் படித்துக்கொண்டு இருக்கிறோம் என்பது வேதனைக்குறிய செய்தி.,.., எப்பத்தான் இந்த கும்பலிடம் இருந்து விடுதலை கிடைக்குமோ.,.,

இப்போ கிடைத்த ஆவணங்கள் சீனத்திடம் கிடைக்காமல் இவர்களிடம் கிடைத்திருந்தால், எப்படி இல்லாத குமரிகண்டத்தை உருவாக்கினார்களோ அது போல் புதியதாக ஏதேனும் ஒன்றை கொண்டுவந்து தமிழர்கள் தலையில் மிளகாய் அரைத்திருப்பார்கள், நல்ல வேளை தப்பித்தோம்……,.,.

பாரதம்

60 ஆண்டுகளாகத்தான் நாங்கள் இந்தியர் 10,000 ஆண்டுகளாக நாங்கள் தமிழர்கள் என்று சொல்லும் அறிவாளிகளுக்கு இந்த பதிவு,.,.,

# பாரதம் என்பது யாரலும் உருவாக்கபட்டது அல்ல.,., மன்னர் ஆட்சி காலத்தில் இப்போது போல் ”சேட்லைட்” மேப் வைத்து எல்லைகள் பிரிக்கவில்லை.,., மன்னர்கள் அனைவரும் இயற்கையாக அமைந்த எல்லைகளையே நாட்டின் எல்லைகளாக பிரித்துக்கொண்டனர்.,.,

அதவாது ஒவ்வொரு ஆற்றின், ஒவ்வொரு நீர்பிடிப்பு பகுதிகளே ஒவ்வொரு நாட்டின் எல்லைகளாக பிரித்துக்கொண்டனர்.,., ஆகையால்தான் மிக அதிகமான நாட்டு பிரிவுகள் பாரதத்தில் இருந்தது

அதே போல் ஒரே மாதிரியான மழைப்பொழிவை கொண்ட நாடுகளின் கூட்டமைப்பை கண்டம் என்றும் அழைக்கப்பட்டது.
இது போல ஒத்த மழைப்பொழிவை கொண்ட 56 தேசங்களின் கூட்டமைப்பே ”பரத கண்டம்” என்று அழைக்கப்பட்டது.....

அப்படி கணக்கு பார்த்தால் பூமி தேன்றியதிலிருந்த நாங்கள் பாரத பிரஜ்சைகள்தான், நீங்கள்(திருடர்கள்) 10,000 ஆண்டுகளாகத்தான் தமிழர்கள்.,. அதேபோல்தான் இந்த ஆரிய திராவிட புரட்டும் .,., இந்த தலைமுறை மிக தெளிவாக உள்ளது.,., இன்னும் உங்கள் புரட்டு எங்களிடம் செல்லுபடியாகது.,., இது செல்லுபடியாகது என்று தெரிந்தவுடன் இப்ப தமிழ் தமிழ் என்று பிரிவினையை ஏற்படுத்தி எத்தனை நாட்களுக்கு ஆட்சி நடத்தபோறிங்க.,., ஏன் எங்களுக்கெல்லாம் தமிழ் பற்று இல்லையா.,., போங்கயையா உங்க புரட்டும் நீங்களும்.,.,

ஆரிய திராவிட புரட்டு

ஆரியன் என்பது இனம் அல்ல.,., அறிவில் சிறந்து அறவழியில் நடக்கும் அனைவரையும் ஆரியன் என்றே அழைத்தார்கள் புலவர்கள்.,.,

”பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே”
என்பது மாணிக்கவாசகர் கூற்று.,.,

இப்படி மாணிக்கவாசகர் பாடியதால் அவர் தமிழர் இல்லை என்று சொல்லிக்கொண்டு ஒரு கும்பல் இன்நேரம் புறப்பட்டு இருக்கும்.,.,.,

அதேபோல் திராவிடம் என்பது இனம் அல்ல.,,.,
திரவம் + இடம் = திராவிடம் அதாவது நீரால் சூழப்பட்ட பகுதி(தீபகற்பம்) என்று பொருள்.,.,


தொல்காப்பியர் தொடக்கம் முதல் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை ஆக்கப்பட்ட தமிழ் நூல்களில் ஒன்று கூட ஆரியரை ஒரு இனம் என்றோ, சமஸ்கிருதத்தை வேற்றின மொழி என்றோ ஒரு வரி தானும் எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய அறிவியல் ஆராய்ச்சி விமர்சன முறையாக மீண்டும் இந்த ஆரியப் படையெடுப்பு அல்லது குடியேற்றக் கொள்கையை அலசி ஆராய்ந்து டேவிட் ஃபுரோலி (David Frawley, the author of ' The myth of Aryan invasion of India, Co- author of ' Vedic Aryans and the origin of civilization), முனைவர் கொன்ராட் எல்ஸ்ட் (Dr. Koenraad Elst, the author of 'Update on the Aryan invasion debate), மிஷெல் டானினோ (Mishell Danino, the author of ' The invasion that never was), பேராசிரியர் கே. இந்திரபாலா (Dr. K. Indrapala, the author of " The evolution of an ethnic identity- the Tamils of Srilanka cC. 300 BCE to C. 1200 BCE) போன்ற பல வரலாற்று ஆசிரியர்களும், ஆராய்ச்சியாளர்களும் விரிவாக எழுதியிருக்கின்றார்கள். இவர்கள் ஆரியப்படையெடுப்பு என்பது பத்தொன்பதாம் நூற்றாண்டு ஆராய்ச்சியாளர்களின் அனுமானமான ஒரு கற்பனைவாதம் என்றும் அதற்கு எந்தவிதமான தொல்லியல், மானுடவியல், வரலாற்று ஆதாரங்களும் இல்லையென்றும் தெள்ளத்தெளிவாக நிரூபித்துள்ளனர்.

மணல் மாஃபியாக்கள்




ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளா வழி வழியாக வாழ்ந்து பல விசயங்களை தன் அனுபவத்தால் உணர்ந்து தனது வாரிசுகளுக்கு சொல்லிக்கொடுத்து சென்றார்கள் நம் பாட்டன் பூட்டன்கள்.

ஆனால் இப்போதைய சந்ததிகள் எழுத்தாளர் ஒருவரின் எண்ணங்களை மட்டும் திணித்து எழுதப்பட்ட புத்தகங்களை படித்துவிட்டு அதுதான் உண்மை என்று நம்பிக்கொண்டு இருப்பது மிகவும் வேதனைக்குரிய விசயம்.,. அச்சேற்றப்பட்ட அனைத்தையும் உண்மை என்று நம்பிக்கொண்டு நம் வருங்கால சந்ததிகளுக்கு எதையையும் மிச்சம் வைக்காமல் முன்னேற்றம் என்ற பெயரில் வளங்களை அழித்துக்கொண்டு இருக்கிறோம்.,

கேட்டால் நாங்கள் பகுத்தறிவுவாதிகள் எங்களுக்குதான் எல்லாம் தெரியும் உங்கள் முன்னோர்கள் முட்டாள்கள் என்று பேசுவார்கள், அதையையும் நாம் கைகொட்டி சிரித்து ரசிப்போம். நம் அப்பன், ஆத்தாவை யாராவது பழித்துபேசும்போது நமக்கு கோவம் வரவேண்டும் ஆனால் நாமோ அதை கேட்டு ரசிக்கிறோம்.

நம் முன்னோர்களுக்கு எதுவும் தெரியாமல் இல்லை, அனைத்தும் அறிந்த அவர்கள் பல விசயங்களை செய்யாமல் தவிர்த்தார்கள். உதாரணம் அவர்கள் வீடு கட்டுவதற்க்கு ஒருபோது ஆற்றுமணலை பயன்படுத்தியது கிடையாது. தன்னுடைய சுயவிருப்பத்திற்கு இயற்கை வளங்களை பயன்படுத்தியது கிடையாது.

அதனால் ஆற்றில் மணல் அள்ளாதீர்கள் என்று சொன்னால் இந்த பகுத்தறியும் வியாதிகள், ஆற்றில் மணல் எடுத்தால் ஆறு ஆழம் ஆகும். ஆறு ஆழம் ஆனால் நல்லதுதான் என்று மக்களை நம்பவைத்துள்ளார்கள்.

அதாவது மிகசரியாக 1 டன் மணல், 1.5 டன் தண்ணிரை சேமித்து வைக்கும். ஆக காவிரி ஆற்றில் ஈரோடு கொடுமுடி முதல் நாகப்பட்டினம் கடற்கரை வரை இருக்கும் மணல், பல கோடான கோடி லிட்டர் தண்ணிரை சேமித்து வைக்கிறது. இது நமது மேட்டூர் டேமில் தேக்கிவைக்கும் தண்ணிரை விட பல லட்சம் மடங்கு அதிகம்.

மணல் அள்ளப்படுவதால் இந்த தண்ணீர் அனைத்தும் மழை காலங்களில் சேமிக்கப்படாமல் கடலில் சென்று வீணாக கலக்கிறது. இதனால் அங்கு நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிடுகிறது. அதுமட்டுமில்லாமல் தண்ணீர் தேங்கி செல்லாமல் வேகமாக ஓடவும் இது வழிவகை செய்கிறது. இதனால் மலைபிரதேச(கொங்கு) பகுதிகளில் அளவுக்கு அதிகமான மண் அரிப்பை இது ஏற்படுத்துகிறது. இவ்வாறு கிடைக்கும் நீரை நாம் முறையாக பயன்படுத்தாமல் எத்தனை காலத்திற்க்கு தண்ணிருக்காக சண்டைப்போட்டு கொண்டு இருப்போம்.

ஆனால் நமது பக்கத்துமாநிலமான கேரள மற்றும் கர்நாடகாவில் மணல் அள்ள தடை இருக்கிறது. அந்த மாநிலங்களில் இருக்கும் அனைத்து ஆறுகளிலும் நீரானது தேங்கியபடியே ஓடும்.. பள்ளி விட்டபின் குழந்தைகள் நேராக வீடு நோக்கி ஓடுவது போல கடலை நோக்கி அதிவிரைவாக ஓடிப்போகாது.,,.,.

அவர்கள் இங்கு இருந்து மணல் வாங்கி கட்டிடங்கள் கட்டுகிறார்கள்.,.,

குறிப்பு: அங்கு திராவிடக்கட்சிகள்(மணல் மாஃபியாக்கள்) ஆட்சியில் இல்லை.,.,.,