Wednesday 13 July 2016

வெள் - வேள்

குறில் நெடிலாக திரிபது இயல்பு,
உதாரணம்
“தெங்காய்” என்பது பிற்காலங்களில் “தேங்காய்” என்று திரிந்தது,
இங்கு ”தெ” என்ற குறில் ”தே” என்ற நெடிலாக உருவம் பெறும்.
அதுபோல்
”வெள்” என்ற சொல்தான் மூலச்சொல் பிற்காலங்களில் அது ”வேள்” என்று திரிந்து வழங்கியது.
அதற்கு காரணம் பல “வெள்” களை குறிக்க “வேளிர்” என்ற சொல் தேவைப்பட்டதால் “வெள்” என்ற சொல் “வேள்” என்று திரிந்தது.
“வெள்” என்றால் ஒளி அதாவது வெளிச்சம் என்று பொருள். அல்லது சுத்தமான என்று பொருள் கொள்ளலாம்.
ராஜா என்ற சமஸ்கிருத சொல்லுக்கு வெளிச்சம் என்று பொருள். அதன் தமிழ் சொல்தான் வெள் என்பது,
M.L.A வை எப்படி Ex M.L.A என்று அழைக்கிறோமோ அதுபோல ஆட்சியை இழந்த “வெள்” என்பவை “வெள்ளாளன்” என்று அழைப்பார்கள்,
வேளாளன் என்பது திரிபு.
200 வருடங்களுக்கு முந்தைய எந்த கல்வெட்டிலும், “வேளாளன்” என்று பார்க்க முடியாது. அனைத்து கல்வெட்டுகளிலும் “வெள்ளாளன்” என்றுதான் இருக்கும்.
அதே போல் தோட்டத்தில் என்ன வெள்ளாமை என்றுதான் கேட்பார்கள் ஒழிய என்ன வேளாண்மை என்று கேட்க மாட்டார்கள்.
ஆக வெள்ளாண்மை என்பதுதான் சரியா சொல், வேளாண்மை என்பது தவறான சொல்.
வெள்ளத்தை ஆள்பவன். வேள் என்றால் விருப்பம் போன்ற அர்ந்தங்கள் பிற்காலங்களில் கற்பிக்கப்பட்டவை. ஒரு காலத்தில் நானும் அதை நம்பிக்கொண்டு இருந்தேன். வாசிப்பு அதிகம் ஆக ஆக எல்லாம் புரிகிறது.

Friday 29 April 2016

பால குலம்

"பால குல வங்கிஷம்"

என்று வீரச்சோழன் பட்டையத்திலும்
சோழியாண்டர் பற்றிய மெக்கன்சி குறிப்பிலும் வரும்

அவர்களை அவ்வாறு கூற என்ன காரணம் இதற்கு என்ன பொருள் என்று தெரியாமல் பல வரலாற்று ஆசிரியர்கள் தங்கள் மனம்போன போக்கில் எழுதுகிறார்கள் ஆனால் உண்மை அதுவல்ல

உதாரணம்

தூவராபாலகர்கள் என்று கூறுவோம் அதற்கு வாயிற்காவலர்கள் என்று பொருள்

அஷ்டதிக்கு பாலகர்கள் என்று கூறுவோம் அதற்கு எட்டுதிசைகளை காப்பவன் என்று பொருள்

பாலபண்டியன் பற்றி கூறும் திருமங்கை ஆழ்வார் "பாலித்து அருளியதால் அவன் பால பாண்டியன்" என்று அழைக்கப்பட்டான் என்று கூறுவார் பாலித்தல் என்றால் காத்தல் என்று பொருள்

ஆக பால என்றால் காத்தல் என்று பொருள்

இதனை தமிழ் லெக்சிகன் அகராதி மற்று வேறுஅகராதிகள் என எதில் தேடினாலும் காப்பவன் என்று பொருளையே கூறுகிறது

நாட்டையும் மக்களையும் காக்கும் குலம் என்ற பொருளில்தான் "பால குல வங்கிஷம்" என்று கூறுகிறார்கள்

வங்கிஷம் என்றால் வம்சம் என்று பொருள்



வன்னியர்

நெல்லு போட்டால் நெல்லு முளைக்கும்

கொள்ளுப்போட்டால் கொள்ளுதான் முளைக்கும்

அதன் அடிப்படையில் சூரிய குலத்தை சேர்ந்த சோழன் வாரிசுகள் சூரியகுலத்தை சேர்த்தவர்களாகத்தான் இருப்பார்கள் அவர்கள் எப்படி அக்னி குலமாக இருக்கமுடியும்

வன்னியர்கள் அனைவரும் அக்னி குலத்தை சேர்ந்தவர்கள்

வன்னி என்றாலே நெருப்பு என்று அனைத்து அகராதிகளும் பொருள் சொல்லுகிறது நெருப்பின் சமஸ்கிருத சொல்லுதான் அக்னி என்பது

எப்படி பார்த்தாலும் வன்னியர் அக்னி குலத்தை சேர்ந்தவர்கள் இவர்கள் எப்படி சூரிய குலத்தை சேர்ந்த சோழராக இருக்கமுடியும்

விதையே மாறி விடுகிறதே

அரசியலுக்கு வேண்டி என்ன வேண்டுமனாலும்பேசலாம் என்று பேசினால் கடைசியில் இப்படித்தான் அவமான படவேண்டியிருக்கும்



பால வெள்ளாளர்

உலகிற்கு முதன் முதலில் விவசாயத்தை கற்று கொடுத்தவர் போதாயனர்

அவ்வாறு கற்று கொடுத்த போதாயனர் அவர் போதித்தபடி விவசாயம் செய்து வாழும் மக்கள் இப்படித்தான் வாழவேண்டும் என்ற சூத்திரத்தையும் வகுத்துவைத்து சொன்றுயுள்ளார்

அவர் வகுத்து கொடுத்த சூத்திர படி இன்று வரை வாழும் இனக்குழுதான் வெள்ளாளர் இனக்குழு

இந்த இனக்குழுவிற்குள் நான்கு வர்ணமும் அடங்கும். இதனை புறநானூறு 183 ஆம் பாடல் தெளிவாக விளக்குகிறது

அந்த பாடலில் வேற்றுமை தெரிந்த நாற்பால்(நான்கு வர்ணம்) என்பது ஒரு குடிக்குள்தான் இருக்கும் என்று கூறும்

இந்த வர்ண பேதம் உழவு குடிக்குள் மட்டுமில்லை மொத்த 18 குடிகளுக்குள்ளும் இந்த நான்கு வர்ணம் இருக்கும்.

குடி வட்டத்திற்குள் வராத ஏனைய இனக்குழு(காட்டு வாசி) களுக்கு வர்ணம் பிரிக்கப்பட்டிருக்க வில்லை.

ஆகையால் வர்ணம் பிரிக்கபட்ட ஒவ்வொரு குடிக்கும் கட்டாயம் எப்படி வாழவேண்டும் என்ற சூத்திரம் இருக்கும் .,

ஒரு குடிக்கு என்ன என்ன அவசியம் இருக்கவேண்டும் என்று இந்த பதிவில் உள்ள படத்தில் பார்த்துக்கொள்ளவும்.,.



கோத்திரம்

கோத்திரம் என்ற சமஸ்கிருத சொல்லுக்கு சரியான தமிழ் சொல் என்ன

கோ + மித்திரம் என்ற சொற்களின் கூட்டே கோத்திரம் என்ற சொல்
கோ என்றால் தலைவன் என்று பொருள்

மித்திரம் என்றால் குழுக்கள் அல்லது கூட்டம் என்று பொருள்

அதாவது கூட்டம் கூட்டமாக வாழும் மக்களின் கோ(தலைவன்) பெயரால் ஏற்படும் பெயர்தான் கோத்திரம் என்பது

ஆக கோத்திரம் என்பதன் சரியான தமிழ் சொல் கூட்டம் என்பது

சும்மா தமிழ் தமிழ் என்று ஊழையிட்டால் போதாது நமது வாழ்வியல் முறையிலும் தமிழ் இருக்க வேண்டும்

கோத்திரம் என்ற சமஸ்கிரத சொல்லை தமிழில் கூட்டம் என்று சொனனால் ஏற்க மாட்டார்களாம் சமஸ்கிருதத்திலேயே சொன்னால்தான் ஏற்பார்களாம்
என்ன ஒரு தமிழ் பற்று போங்க

தமிழின் தொன்மை

ஜாதி என்ற வட்டத்தை தாண்டி நாம் பேசும் மொழி தமிழ் என்ற உணர்வோடு படியுங்கள்.
இந்த பதிவின் உள் அர்ந்தம் புரியும்.

ஆந்தை கூட்டம்

இந்த பெயரை கேட்டவுடன் கொங்கு வெள்ளாளர்கள்தான் நம் நினைவுக்கு வருவார்கள். காரணம் இதுபோன்ற தொன்மையான கோத்திர பெயர்கள் தமிழகத்தில் எந்த இனக்குழுவிடமும் இல்லாமல் இவர்களிடம் மட்டுமே உள்ளது.

இந்த இனக்குழுவைத்தான் அமெரிக்காவின் போர்டு பவுண்டேசன் தற்பொழுது குறிவைத்துள்ளது. பெருமாள் முருகன் என்ற எழுத்தாளருக்கு 12 லட்சம் கொடுத்து நூலை எழுத வைத்துள்ளார்கள் அது போல் கரூர் பாதிரியார் என நீண்டு கொண்டே போகிறது.

அவ்வாறு ஒரு குறிப்பிட்ட இனகுழுவை தாக்கி எழுத ஏன் அமேரிக்க மிஷனெரிகள் போட்டி போட்டுக்கொண்டு நிதியுதவி செய்ய வேண்டும். அது பற்றி தொடர்ந்து பார்ப்போம்

நமது தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தமிழ் தமிழ் என்று உயிரை கொடுப்பதுபோல் நடிக்கிறது என்றுதான் சொல்லவேண்டும் காரணம் தொல்காப்பியம் கூறும் உண்மையான தமிழ் சொற்கள் நிரம்பி காணப்படுகின்ற இது போன்ற இனக்குழுக்கள் தாக்கி எழுதப்படும்பொழுது அதை கண்டிக்க கூட மாட்டோம் என்று கண்னை கட்டிக்கொண்டு இருக்கிறது.
அத்துடன் தற்பொழுது எழுத வரும் வரலாற்று ஆய்வாளர்களும் ஒருதலை பட்சமாகவே செயல்படுகிறார்கள்.

சரி விசயத்திற்கு வருவோம் கூட்டம் என்றால் கோத்திரம் என்று போன பதிவில் பார்த்தோம். அதில் எந்த குழப்பமும் இல்லை ஆனால் அது என்ன ஆந்தை, “ஆந்தை” என்றால் பறவை வகை என்று பாமர மக்கள் கருதுவார்கள். ஆனால் ஆய்வாளர்களுக்கு இது பற்றி நன்கு தெரிந்தும் வெளியே சொல்ல மனது இல்லாமல் ஒதுக்கிவிடுகிறார்கள்.

நமது இலக்கண நூலான தொல்காப்பியம் ஒரு சொல் எவ்வாறு பொருள் பிரியும் அதே போல் இரண்டு சொற்கள் சேர்ந்தால் எவ்வாறு திரியும் என்று தெளிவாக சொல்லியுள்ளது.

தொல்காப்பிய விதிபடி “ஆந்தை” என்ற சொல்லை பிரித்தால் “ஆதன் + அந்தை” என்று பிரியும் இதில் “அந்தை” என்றால் தலைவன் என்று பொருள். சிலர் தந்தை என்று பிரிப்பார்கள் அது தவறு.

அதாவது ஆதன்களின் தலைவன் என்பதே இதன் பொருள். இந்த பதிவில் இருக்கும் படம் 1 யில் பார்க்கவும் அந்த கல்வெட்டு சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. தமிழ் எழுத்துவடிவத்தின் துவக்க காலம். அந்த கல்வெட்டில் “கோ-ஆதன் செல்லி” என்று பொறிக்கப்பட்டுள்ளது. இதில் “கோ” என்றால தலைவன் என்று பொருள் அதாவது “ஆதன்களின் தலைவன்” என்று பொருள்
அதில் “செல்லி” என்று வரும் பெயர் அவர்களின் குலதெய்வத்தின் பெயர் இன்றும் ஆந்தை கூட்டத்தினர் அதே பெயரில் வழிபட்டு வருகிறார்கள். இரும்பொறை என்பது சேரனின் பெயர்.

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாறு எந்த இனக்குழுவுக்கும் இதுவரை ஆதாரத்துடன் கிடைக்கவில்லை. இந்தியாவில் மட்டுமில்லை உலக அளவில் என்பது கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்று.
அடுத்து படம் 2 -யில் பார்க்கவும் அதுவும் இரண்டாயிரம் வருடங்களுக்கு முற்பட்டது, இந்த கல்வெட்டு ஆந்தை கூட்டத்தின் கல்வெட்டுக்கு அருகே கிடைக்கிறது. அதில் “ கொற்றந்தை இளவல்” என்று பொறிக்கப்பட்டுள்ளது. இந்த கொற்றந்தை என்னும் கோத்திரம் பால வெள்ளாளர் என்ற பிரிவில் வரும் ஒரு கோத்திரம்.

அடுத்த படம் 3 - யில் பார்க்கவும் அதுவும் மேற்கண்ட கல்வெட்டுகளின் சமகாலம் கல்வெட்டு ஆகும். அதில் “ஆதன்” என்ற கோத்திரம் பொறிக்கபட்டுள்ளது. இது தற்பொழுது பால வெள்ளாளர் மற்றும் கொங்கு வெள்ளாளர் என இரு பிரிவிடமும் வழங்கப்பெறும் கோத்திரம் ஆகும்.
அடுத்த படம் 4-யில் பார்க்கவும் இந்த கல்வெட்டு 1500 ஆண்டுகள் பழமையானது. அந்த கல்வெட்டில் “வண்ணக்கன்” என்ற கோத்திரம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த கோத்திரம் தற்பொழுது கொங்கு வெள்ளாளர்களில் ஒரு கோத்திரம் ஆகும். அதில் “வண்ணக்கன் தேவன் சாத்தன்” என்று கூறுகிறது. சாத்தன் என்பது சேரனின் பெயர் என்பது கவனிக்கதக்கது.

இவ்வாறு மிகவும் தொன்மையான வரலாற்று எச்சங்களை தாங்கி நிற்கும் இனக்குழுவை கோவல படுத்த பல நாடுகள் போட்டிபோடுகிறது. அதற்கு முதல் காரணம் இவர்களின் கலாச்சாரத்தை சிதைத்தால்தான் இந்து மதத்தின் கலாச்சாரத்தை சிதைக்கமுடியும். அதன் பிறகே மதம் மாற்று வேலையை தொடங்கமுடியும்.

இதை இங்கு உள்ளவர்களும் புரிந்து கொள்ளாமல் இது போன்ற கேவலமான எழுத்தாளர்களுக்கு ஆதரவாக வரிந்து கட்டிக்கொண்டு வருவது வருத்ததிற்குரியது.

இவ்வாறு மிகபழமையான தமிழ் மொழியின் எச்சங்களை தாங்கி நிற்கும் குழுவினரை காக்காமல் இவர்களால் எப்படி தமிழை காக்கமுடியும்.
இந்த செய்தியை முடிந்த அளவுக்கு உங்கள் நண்பர்களுடனாவது பகிர்ந்து கொள்ளுங்கள் ஜாதி என்ற வட்டத்தை தாண்டி நமது மொழி தமிழ் என்ற உணர்வோடு.

இதுபோன்ற பழமைகளை ஜாதிகள்தான் இன்று வரை காத்து நிற்கிறது என்பதும் நிதர்சனமான உண்மை.








நல்லூடையார் நடுகல்

நல்லூடையார் நடுகல்

உடனே உடையார் ஜாதி என்று நினைக்க வேண்டாம் காரணம் உடையார் என்பது பட்டம்

அதேபோல் இந்த நடுகல் அவர் வேட்டைக்கு சென்று உயிரிழந்த இடத்தில் நடப்பட்ட நடுகல்

வேட்டைக்கு சென்றதால் உடனே வேட்டுவர் என்று எண்ண வேண்டாம் அந்த சிற்பத்தில் அவருக்கு சாமரம் விசப்படுகிறது

சாமரம் வெள்ளாளருக்கு உரியது என்று இடங்கை வலங்கை புராணம் கூறும்

இவர் கன்டியன்கோயில் ஓதாளன் கோத்திரம்

இதை ஏன் பதிவிடுகிறேன் என்றால் பட்டத்தை வைத்து வரலாறு எழுதினால் அவர் உடையார் ஜாதி என்றும் இல்லையென்றால் வேட்டுவர் ஜாதி என்று எழுதுவார்கள்

வரலாறு ஆய்வு செய்யும் போது குலம் கோத்திரம் வைத்துதான் முடிவு செய்யவேண்டும்

பட்டத்தை வைத்து முடிவுக்கு வந்தால் அது உண்மையான வரலாறு இல்லை

தற்பொழுது நாம் படிக்கும் அனைத்து வரலாறும் இதுபோன்று எழுதப்பட்டதுதான்

அது எப்படி உண்மையான வரலாறாக இருக்கமுடியும்

திராவிட கொள்கை நமக்கு கிடைத்த சாபம்

புரிந்தால் சரி