Friday 29 April 2016

தமிழின் தொன்மை

ஜாதி என்ற வட்டத்தை தாண்டி நாம் பேசும் மொழி தமிழ் என்ற உணர்வோடு படியுங்கள்.
இந்த பதிவின் உள் அர்ந்தம் புரியும்.

ஆந்தை கூட்டம்

இந்த பெயரை கேட்டவுடன் கொங்கு வெள்ளாளர்கள்தான் நம் நினைவுக்கு வருவார்கள். காரணம் இதுபோன்ற தொன்மையான கோத்திர பெயர்கள் தமிழகத்தில் எந்த இனக்குழுவிடமும் இல்லாமல் இவர்களிடம் மட்டுமே உள்ளது.

இந்த இனக்குழுவைத்தான் அமெரிக்காவின் போர்டு பவுண்டேசன் தற்பொழுது குறிவைத்துள்ளது. பெருமாள் முருகன் என்ற எழுத்தாளருக்கு 12 லட்சம் கொடுத்து நூலை எழுத வைத்துள்ளார்கள் அது போல் கரூர் பாதிரியார் என நீண்டு கொண்டே போகிறது.

அவ்வாறு ஒரு குறிப்பிட்ட இனகுழுவை தாக்கி எழுத ஏன் அமேரிக்க மிஷனெரிகள் போட்டி போட்டுக்கொண்டு நிதியுதவி செய்ய வேண்டும். அது பற்றி தொடர்ந்து பார்ப்போம்

நமது தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தமிழ் தமிழ் என்று உயிரை கொடுப்பதுபோல் நடிக்கிறது என்றுதான் சொல்லவேண்டும் காரணம் தொல்காப்பியம் கூறும் உண்மையான தமிழ் சொற்கள் நிரம்பி காணப்படுகின்ற இது போன்ற இனக்குழுக்கள் தாக்கி எழுதப்படும்பொழுது அதை கண்டிக்க கூட மாட்டோம் என்று கண்னை கட்டிக்கொண்டு இருக்கிறது.
அத்துடன் தற்பொழுது எழுத வரும் வரலாற்று ஆய்வாளர்களும் ஒருதலை பட்சமாகவே செயல்படுகிறார்கள்.

சரி விசயத்திற்கு வருவோம் கூட்டம் என்றால் கோத்திரம் என்று போன பதிவில் பார்த்தோம். அதில் எந்த குழப்பமும் இல்லை ஆனால் அது என்ன ஆந்தை, “ஆந்தை” என்றால் பறவை வகை என்று பாமர மக்கள் கருதுவார்கள். ஆனால் ஆய்வாளர்களுக்கு இது பற்றி நன்கு தெரிந்தும் வெளியே சொல்ல மனது இல்லாமல் ஒதுக்கிவிடுகிறார்கள்.

நமது இலக்கண நூலான தொல்காப்பியம் ஒரு சொல் எவ்வாறு பொருள் பிரியும் அதே போல் இரண்டு சொற்கள் சேர்ந்தால் எவ்வாறு திரியும் என்று தெளிவாக சொல்லியுள்ளது.

தொல்காப்பிய விதிபடி “ஆந்தை” என்ற சொல்லை பிரித்தால் “ஆதன் + அந்தை” என்று பிரியும் இதில் “அந்தை” என்றால் தலைவன் என்று பொருள். சிலர் தந்தை என்று பிரிப்பார்கள் அது தவறு.

அதாவது ஆதன்களின் தலைவன் என்பதே இதன் பொருள். இந்த பதிவில் இருக்கும் படம் 1 யில் பார்க்கவும் அந்த கல்வெட்டு சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. தமிழ் எழுத்துவடிவத்தின் துவக்க காலம். அந்த கல்வெட்டில் “கோ-ஆதன் செல்லி” என்று பொறிக்கப்பட்டுள்ளது. இதில் “கோ” என்றால தலைவன் என்று பொருள் அதாவது “ஆதன்களின் தலைவன்” என்று பொருள்
அதில் “செல்லி” என்று வரும் பெயர் அவர்களின் குலதெய்வத்தின் பெயர் இன்றும் ஆந்தை கூட்டத்தினர் அதே பெயரில் வழிபட்டு வருகிறார்கள். இரும்பொறை என்பது சேரனின் பெயர்.

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாறு எந்த இனக்குழுவுக்கும் இதுவரை ஆதாரத்துடன் கிடைக்கவில்லை. இந்தியாவில் மட்டுமில்லை உலக அளவில் என்பது கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்று.
அடுத்து படம் 2 -யில் பார்க்கவும் அதுவும் இரண்டாயிரம் வருடங்களுக்கு முற்பட்டது, இந்த கல்வெட்டு ஆந்தை கூட்டத்தின் கல்வெட்டுக்கு அருகே கிடைக்கிறது. அதில் “ கொற்றந்தை இளவல்” என்று பொறிக்கப்பட்டுள்ளது. இந்த கொற்றந்தை என்னும் கோத்திரம் பால வெள்ளாளர் என்ற பிரிவில் வரும் ஒரு கோத்திரம்.

அடுத்த படம் 3 - யில் பார்க்கவும் அதுவும் மேற்கண்ட கல்வெட்டுகளின் சமகாலம் கல்வெட்டு ஆகும். அதில் “ஆதன்” என்ற கோத்திரம் பொறிக்கபட்டுள்ளது. இது தற்பொழுது பால வெள்ளாளர் மற்றும் கொங்கு வெள்ளாளர் என இரு பிரிவிடமும் வழங்கப்பெறும் கோத்திரம் ஆகும்.
அடுத்த படம் 4-யில் பார்க்கவும் இந்த கல்வெட்டு 1500 ஆண்டுகள் பழமையானது. அந்த கல்வெட்டில் “வண்ணக்கன்” என்ற கோத்திரம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த கோத்திரம் தற்பொழுது கொங்கு வெள்ளாளர்களில் ஒரு கோத்திரம் ஆகும். அதில் “வண்ணக்கன் தேவன் சாத்தன்” என்று கூறுகிறது. சாத்தன் என்பது சேரனின் பெயர் என்பது கவனிக்கதக்கது.

இவ்வாறு மிகவும் தொன்மையான வரலாற்று எச்சங்களை தாங்கி நிற்கும் இனக்குழுவை கோவல படுத்த பல நாடுகள் போட்டிபோடுகிறது. அதற்கு முதல் காரணம் இவர்களின் கலாச்சாரத்தை சிதைத்தால்தான் இந்து மதத்தின் கலாச்சாரத்தை சிதைக்கமுடியும். அதன் பிறகே மதம் மாற்று வேலையை தொடங்கமுடியும்.

இதை இங்கு உள்ளவர்களும் புரிந்து கொள்ளாமல் இது போன்ற கேவலமான எழுத்தாளர்களுக்கு ஆதரவாக வரிந்து கட்டிக்கொண்டு வருவது வருத்ததிற்குரியது.

இவ்வாறு மிகபழமையான தமிழ் மொழியின் எச்சங்களை தாங்கி நிற்கும் குழுவினரை காக்காமல் இவர்களால் எப்படி தமிழை காக்கமுடியும்.
இந்த செய்தியை முடிந்த அளவுக்கு உங்கள் நண்பர்களுடனாவது பகிர்ந்து கொள்ளுங்கள் ஜாதி என்ற வட்டத்தை தாண்டி நமது மொழி தமிழ் என்ற உணர்வோடு.

இதுபோன்ற பழமைகளை ஜாதிகள்தான் இன்று வரை காத்து நிற்கிறது என்பதும் நிதர்சனமான உண்மை.








No comments:

Post a Comment