Wednesday 19 February 2014

கடவுள்


 
நான் இடும் வரலாறு மற்றும் முன்னோர்களின் பெருமைகளை பற்றிய பதிவுகளை படித்த முகநூல் நண்பர் ஒருவர் என்னுடன் உள் டப்பியில் வந்து பல விவரங்களை கேட்டு தெரிந்துகொண்டார். அப்போது அவர் கடவுள் என் கண்களுக்கு தெரிவதில்லை, அவர் குரல் எனக்கு கேட்கவில்லை அதனால் கடவுள் இருக்கிறார் என்பதை என்னால் எற்றுக்கொள்ள முடியாது என்றார்.

# கோவையிலிருந்து சென்னையிலிருக்கும் ஒருவருக்கு கைப்பேசியில் பேசுவதை சேலத்திலிருக்கும் ஒருவர் என் கண்களுக்கு தெரியவில்லை காதுகளுக்கும் கேட்கவில்லை அதனால் அவர்கள் இருவரும் பேசிக்கொள்ளவில்லை என்று கூறுவது எவ்வளவு பெரிய முட்டாள்த்தனமோ அதுபோன்றதுதான் இவருடைய வாதமும்... இன்று எவ்வாறு சிம் கார்ட்டும் செல்போனும் செயல்படுகிறதோ அதே தத்துவம் தான் நம் முன்னோர்களாள் ஏற்படுத்தப்பட்ட கோவில் சிலைகளும், யந்திரங்களும் செயல்படுகிறது... கோபுரம் என்பது டவர் போன்றது, ஆனால் நம் முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்ட இந்த தத்துவத்தால் எந்த சிட்டுக்குருவியும் சாகவில்லை யாருக்கும் புற்றுநோயும் வரவில்லை...

No comments:

Post a Comment