Thursday 28 April 2016

செங்கல் பட்டு

** "செங்கல்பட்டு" **

இந்த ஊர் சென்னையில் இருந்து திண்டிவனம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது

இதற்கு ஏன் அப்படி பெயர் வந்தது என்று பார்ப்போம்

தனிஒருவன் என்ற சினிமாவில் தம்பிராமையாவின் பெயர்

** "செங்கல்ராயன்" **

அது என்ன செங்கல்ராயன் அப்படி ஏன் பெயர் வைத்தார்கள்

சங்க காலம் தொட்டே நமது பாரம்பரியத்தில் மலர்கள் முக்கிய பங்கு வகிக்கிறது

உதாரணம்
சோழனுக்கு உரியது ஆத்தி பூ(ஆர்)

பாண்டியனுக்குரியது வேப்பம் பூ

சேரனுக்குரியது பனம்பூ

ஆகையால் இலக்கியங்கள் இவர்களை

ஆர்தார்கோன்
வேம்பின்கண்ணிக்கோன்
போந்தின்கண்ணிக்கோன்

என்று அழைக்கும்

கோன் என்பதை போலதான் ராயர் என்றாலும் அரசன் என்று பொருள்படும்
இங்கு செங்கல் என்பது திரிபு அதன்சரியான பெயர்

**"செங்கழு"**

அதாவது செங்கழுநீர் என்பது குவளை மலரை குறிக்கும் மலர்.

இந்த மலர் வேளாளர் என்ற சமூத்திற்கு உரியது என்று வேளாளர்களின் பட்டையங்கள் கூறும்

அதாவது செங்கழுநீர் மாலையை அணியும் சமூகத்தின் தலைவனை(ராயன்)
** "செங்கழுராயன்" **
என்று அழைப்பார்கள் அதுவே காலப்போக்கில் செங்கல்ராயன் என்று மாறிவிட்டது

அதேபோலதான் பட்டு என்பது பற்று என்பதின் திரிபு

பற்று என்றால் பற்றிக்கொண்டது என்று பொருள்

அதாவது செங்கழுநீர் பூவை மாலையாக அணிபவர்கள் பற்றிக்கொண்ட ஊர் என்பதால் அவ்வூருக்கு

** "செங்கழுநீர் பற்று" **

என்று பெயர் ஏற்பட்டது அதுவே காலப்போக்கில் செங்கல்பட்டு என்று மருவியுள்ளது

No comments:

Post a Comment