Thursday 28 April 2016

ஆறை நாடும் பால வேளாளரும் நூல்வெளியீட்டு

பழையாறை எனும் ஆறை

சோழ குலத்தினர் எங்கு சென்றாலும் தங்கள் வாழ்விடத்தை ஆறை என்று பெயரில்தான் அமைத்துக்கொள்வார்கள்

இதை சங்ககாலம் தொட்டு காண இயலும்

மேலை சாளுக்கியன் பதவியேற்றவுடன் ஒட்டுமொத்த சோழ குலங்களும் கொங்கு நாடு குடியேறி தங்கள் வாழ்விடமாக ஆறை என்ற பெயரில் நாடு அமைத்துக்கொண்டார்கள்

அந்த ஆறை நாட்டை பற்றி திரு.வெங்கடசாமி ஐயா அவர்கள் எழுதிய "கொங்கில் ஆறை நாடும் பால வெள்ளாளரும்" என்ற நூலை

"ஆறை நாட்டு ஆச்சாரிய மூர்த்தி சோழர்களின் குலகுரு திருமுருகன்பூண்டி மருதமலை ஆதினம் காசிப கோத்திரத்து ஸ்ரீமத் மார்கண்டயே பண்டித குரு சுவாமிகள்" அவர்களின் திருக்கரங்களால் பெற்றகொண்ட தருணம் எனது வாழ்நாளில் மறக்க முடியாது தருணம் ஆகும்

உடன் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக இருந்து ஒய்வு பெற்ற புலவர் ராசு ஐயா அவர்கள் (இடது)

இன்றை கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் வடக்கு பகுதியே ஆறை நாடு ஆகும்

இதன் கிழக்கு எல்லை செங்கப்பள்ளி ஊர் தவிர்த்து காட்டு கன்னிமார் கோவிலும்

மேற்கு எல்லை வெள்ளியங்கிரி மலையும்

தெற்கு எல்லை நொய்யல் ஆறும்

வடக்கு எல்லை பவானி ஆறும்

என நூறு கிலோ மீட்டர் நீளமும் அறுபது கிலோமீட்டர் அகலமும் கொண்ட பகுதியாகும்

மேலும் ஆறை நாடு பற்றிய விவரங்களுக்கு : http://kongupattakarars.blogspot.in/2011/03/5.html?m=1


1 comment:

  1. இந்த புத்தகம் இப்பொழுது கிடைக்கும்ங்களா

    ReplyDelete