Thursday 28 April 2016

சோழன் யார்

ஒரே கேள்வி:

சித்திரமேழி(ஏர்கலப்பை) சபை ஏன் சோழர்களின் ஆட்சி காலத்தில் மட்டும் சிறப்பு பெற்று விழங்கியது?

பாண்டியரின் ஆட்சி காலத்திலோ பல்லவரின் ஆட்சிகாலத்திலோ சித்திரமேழி சபை சிறப்பு பெற்றிருக்கவில்லை என்பது அனைவரும் அறிந்ததே.

சோழபேரரசு கட்டமைக்கப்பட்ட காலத்தின் தொடக்கத்தில் இருந்து சோழப்பேரரசு விழ்ச்சி அடையும் வரை தொடர்ந்து சித்திரமேழி சபையின் மெய்கீர்த்தி தென்யிந்தியா முழுவதும் பரவலாக கிடைக்கும். ஆனால் சோழ வீழ்ச்சிக்கு பிறகு சித்திர மேழி சபையும் வீழ்ச்சி அடைந்துவிடும். அந்த மெய்கீர்த்தியை கிழே இருக்கும் லிங்கில் சென்று பார்கவும்.

அதேபோல் யார் உண்மையான் க்ஷத்திரியர்கள் என்று நான் ஏற்கனவே பதிவிட்டிருந்தேன் அதனுடைய லிங்கும் கிழே:

https://www.facebook.com/photo.php?fbid=1169463253080647&set=pb.100000509507105.-2207520000.1442239895.&type=3&theater

அதேபோல் பல முறை அழுத்தம் திருத்தமாக சோழன் சுத்தமான வெள்ளாளன் என்று நான் கூறியுள்ளேன். அதற்கான ஆதாரங்களையும் நான் வரிசையாக அடிக்கியவண்ணம் உள்ளேன்.

இந்த படத்தில் இருக்கும் பாடல் புறநானுறு 58- இதில் புலவர் சோழன் மற்றும் பாண்டியனை பற்றி மாறி மாறி சொல்லியவண்ணம் பாடியுள்ளார். அவ்வாறு பாடும் புலவர் சோழனை பற்றி கூறும் போது எப்பொழுதுமே மேழியை தன் கையில் வைத்திருக்கும் பலராமனை சோழனாக கூறுகிறார். கிருஷ்ணரை பாண்டியனாக கூறுகிறார்.

சோழன் மேழிக்குரியவன் என்பதால் இங்கு மேழிக்குரிய பலராமனும் சோழனுக்கு ஒப்பாக கூறப்படுகிறான்.

இன்னும் பல ஆதாரங்கள் உள்ளது தொகுப்பை விரைவில் வெளியிடுகிறேன்.



No comments:

Post a Comment