Thursday 28 April 2016

கொங்கர் கோன்

மக்களாட்சி நடைபெற்றுகொண்டு இருக்கும் இந்தியாவில் திடிரென மன்னராட்சி ஏற்படுகிறது என்று கற்பனை செய்துகொள்ளுங்கள்

உடனே அந்த அரசு 100, 500, 1000, என்று ஏற்கனவே இருந்த பணங்களுக்கு புதிதாக பெயர் சூட்டி இனி அந்தபெயரிலேயே மக்கள் அழைக்கவேண்டும் என்று ஆணையிடுகிறது

அதில்
100 க்கு கலாம் பணம் என்றும்
500 க்கு காந்தி பணம் என்று பெயர் சூட்டுகிறது

அப்ப உயர்மதிப்பு கொண்ட பணமான 1000 க்கு என்ன பெயர் சூட்டும்

மற்றஇருவரை விட அதிகம் செல்வாக்கு பெற்ற ஒருவரின் பெயரைத்தான் சூட்ட முடியும்

சும்மா ரோட்டில் செல்பவர்கள் பெயரை எல்லாம் சூட்ட மாட்டார்கள் அல்லவா

மூவேந்தர் ஆட்சிகாலத்தில்

மாடை
வராகன்
கழஞ்சு

இது போன்ற பல பணங்கள் நடைமுறையில் இருந்தது ஆனால் அனைத்திற்கும் உயர்ந்தது கழஞ்சு என்ற பணம் மட்டுமே

கழஞ்சுக்கு மேற்பட்ட பணம் தமிழ்நாட்டில் இல்லை

இதிலிருந்து கழஞ்சு என்ற பெயர் ஏதோ ஒருவகையில் சிறப்புபெற்று இருந்ததை அறியலாம்

படம்: கீரனூர் கல்வெட்டு(பழனி)

"வெள்ளாள கழஞ்சியரில் தேவனான கொங்கிளங்கோன்" என்று சோழர்கால கல்வெட்டு கூறுகிறது

இதில்

கழஞ்சியர் என்பது கோத்திரம்

கொங்கிளங்கோன் என்பது அவர்கள் என்ன அதிகாரத்திற்குரியவர்கள் என்பதை உணர்த்தும்

கொங்கு + இளம் + கோன் = கொங்கிளங்கோன்

கொங்கு நாட்டிற்கு இளவரசன் என்று பொருள்

அதாவது இவர்கள் கொங்குநாட்டின் ஆட்சியாளர் என்பது தெளிவு

இந்த ஆட்சியாளரின் கோத்திர பெயரை தமிழகத்தின் உயர்ந்த பணத்திற்கு பெயராக சூட்டியிருந்தார்கள் என்றால் அவர்கள் எந்த அளவுக்கு செல்வாக்கு பெற்றவர்களாக இருந்திருக்க வேண்டும்

ஆனால் தற்பொழுது இவர்கள் இருப்பது கூடா யாருக்கும் தெரியவில்லை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே நந்தவனப்பாளையம் என்ற பகுதியை சுற்றி வாழ்ந்துவருகிறார்கள்



No comments:

Post a Comment