Thursday 28 April 2016

சோழன் யார்

சோழர் யார் என்று 600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த “வாலசுந்தர கவிராயர்” தனது பாடலில் தெளிவாக கூறிசென்றுள்ளார். ஆனால் அதற்கு உரை எழுதியவர்களுக்கும் அதை வெளியிட்டுள்ள தமிழக அரசுக்கும் இது தெளிவாக தெரிந்திருந்தும் மழுப்பாலான உரையை வெளியிட்டுள்ளார்கள் . இந்த பாடலில் பால வெள்ளாளரில் பைதலை கோத்திரத்தார்தான் “சோழ அரசர்கள்” என்று தெளிவாக கூறுகிறது. அதில் “வம்புறு கண்டன்” என்று அவரை கூறுகிறது. வம்புறு என்றால் புதிய என்று பொருள் அதாவது கொங்கு நாட்டிற்கு புதியதாக வந்த கண்டன் என்று கூறுகிறது.

மேலை சாளுக்கியன் பட்டமேற்றவுடன் ப்ழையாறையில் இருந்த அரச குலத்தவர்கள் ஒட்டுமொத்தமாக கொங்கு நாடு குடியேறிவிட்டார்கள். அவ்வாறு அவர்கள் குடியேறி வாழ்ந்து வரும் பகுதிற்கு ஆறை நாடு என்று பெயர் ஏற்பட்டது. இவர்கள் ஆறை எனும் பழையாறை பகுதியில் இருந்து கொங்கு நாட்டிற்கு புதிதாக குடியேறும் போது அவர்களுடன் சோழபேரரசின் 79 வளநாட்டார்களும்(கொங்கு வெள்ளாளர்) கொங்குநாடு குடியேறி விட்டதாக மெக்கன்சி ஆவணங்கள் கூறும்.

http://kongupattakarars.blogspot.in/2011/03/5.html

அதேபோல் பதிணென் வேளிர்களின் தலைவரான பிள்ளந்தை கோத்திரத்து மசக்காளி மன்றாடியாரும்(பால வெள்ளாளர்) திருத்தவதுறையில்(லால்குடி) இருந்து கொங்கு நாடு குடியேறியதாக மசக்காளி மன்றாடியார் பட்டையம் கூறும்.

காங்கயம் செங்கண்ணன் கோத்திரத்து பல்லவராயரும் சோழன் ஆட்சிகாலத்தில் ராஜகம்பீர வள நாட்டு(திருச்சி சுற்று பகுதி) நாட்டாரக இருந்ததாகவும் சோழ விழ்ச்சிக்கு பிறகு கொங்குநாடு குடியேறிவிட்டதாக பல்லவராயர் கைபீது கூறும்.

இவர்கள்(சோழர்) ஆட்சி வீழ்ச்சிக்கு பிறகு இவர்களை “வீர விக்கிரம கரிகால சோழியாண்டான்” என்று அனைத்து கல்வெட்டுக்கள், பட்டையங்கள், ஓலைச்சுவடிகள் ஆகியவை கூறுகின்றது.

அதாவது ”சோழியாண்டான்” என்றால் சோழனாக ஆண்டவன் என்று பொருள். இவ்வாறு கூறும் ஆவணங்கள் பற்பல. அவினாசி கோவில் கல்வெட்டு ஒன்று இவரை கூறும் போது “ஆண்ட மக்கள் சேவூர் கவுண்டர்கள் சோழியாண்டார் சூரிய தேவன்” என்று கூறும். அந்த கல்வெட்டை அவினாசி பெரிய கோவிலில் இன்று காணலாம். இவர்கள் சூரிய வம்சம் என்பதால் “சூரிய தேவன்” என்று கூறப்படுகிறது.

http://www.tamilvu.org/slet/l5100/l5100pd2.jsp?bookid=101&pno=191

கங்கையும் கடாரமும் கொண்டு விளங்கிய ஒட்டு மொத்த சோழ பேரரசும் கொங்குநாட்டில் ஐக்கியம் ஆகி 800 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் இன்றைய் வரலாற்று ஆய்வாளர்கள் சோழனை சிதம்பரம் பக்கமும், தஞ்சாவூர் பக்கமும் தேடிக்கொண்டு இருப்பதுதான் வேடிக்கை, நகைச்சுவையின் உச்சகட்டம் என்று கூட கூறலாம்.

எனது பழைய பதிவுகளில் சோழன் சுத்தமான வெள்ளாளன் என்பதற்கும் யார் உண்மையான க்ஷத்திரியர்கள் என்பதற்கும் பல ஆதாரங்களை அடிக்கியுள்ளேன்.



1 comment:

  1. சோழர் படை திரண்டு கொண்டு உள்ளது

    ReplyDelete