Thursday 28 April 2016

தமிழகத்தில் நான்கு வர்ணங்கள்

வெள்ளாளரில் இருக்கும் நான்கு வர்ணங்கள் பற்றி ஏற்கனவே பதிவிட்டிருந்தேன்

நண்பரின் வேண்டுகேளுக்கினங்க மீண்டும் பதிகிறேன்

---- * * * * ----

பிராமண வர்ணம்:

ஆதி சைவ சிவாச்சாரியர்கள்
கல்வெட்டுகள் இவர்களை ஏர் கலப்பை ஐயன் என்றே அழைக்கும்

இவர்களுக்கு உரியது திருமேழி அதனாலேயே இவர்கள் திருமேழியர் என்று அழைக்கப்படுவார்கள்

---- * * * * ----

க்ஷத்திரிய வர்ணம்:

காமிண்டர் என்ற பட்டம் உள்ளவர்கள் க்ஷத்திரிய வர்ணம்

கா என்றால் காத்தல் என்று பொருள்

மிண்டன் என்றால் வீரன் என்று பொருள்

நாட்டையும் நாட்டுமக்களையும் காக்கும் வீரன் என்று பொருள்

மேலும் இவர்களை பற்றிநேற்றைய பதிவில் காண்க

இவர்களுக்கு உரியது சித்திர மேழி ஆகையால் இவர்களை சித்திர மேழியர் என்று அழைக்கப்படுவார்கள்

---- * * * * ----

வைசிய வரணம்:

பிள்ளை பட்டம் பெற்றவர்கள் இவர்கள் பெருநில கிழார்கள்

சுய தொழில் அதாவது பன்னையம் நடத்துபவர்கள்

நிகண்டுகள்

தன சைியன்
பூவைசியன்
கோ வைசியன்

என்று தனிதனியாக பிரித்துக்காட்டும்

ஆனிறை காத்தல் பூ வைசியர் பணி "பூ" என்றால் பூமி என்று பொருள்

ஆனிறை காப்பவர்கள் பிள்ளை பட்டம் பெற்றவர்கள் என்று தொல்காப்பியம் கூறும்

இவர்களுக்கு உரியது பொன்மேழி ஆகையால் இவர்கள் பொன்மேழியர் என்று அழைக்கப்பட்டனர்

---- * * * * ----

சூத்திர வர்ணம்:

இவர்களும் பிள்ளை பட்டம் பெற்றவர்கள் ஆனால் இவர்களுக்கு கோத்திரங்கள் கிடையாது

இவர்கள் நிலகிழார்களிடம் உழவர்களாக இருந்தவர்கள்

காமிக ஆகமம் படலம் 25 கோத்திர நிர்ணய விதியில் கோத்திரங்கள் இல்லாதவர்களே சூத்திரர்கள் என்று கூறும்

இவர்களுக்குரியது மேழி ஆகையால் இவர்களை மேழியர் என்று அழைக்கப்பட்டார்கள்

---- * * * * ----

மேற்கண்ட நான்கு வர்ணமும் உழுவு என்ற குடிக்குள் இருந்தது

இதைத்தான் சித்திர மேழி நாட்டார் மெய்கீர்த்தி

"பூதேவி புத்ராநாம் சாதூர் வர்ணஸ குலோத்பவ ஸர்வலோஹிதார்த்தாய"

என்று கூறும்

நான் பல முறை ஆதாரங்களுடன் பதிவு செய்து விட்டேன் வர்ணம் என்பது ஒவ்வொரு குடிக்கும் உள்ளேதான் பிரிக்கப்பட்டிருந்தது வெளியே இல்லை என்று

இனியும் புரியவில்லை என்றால் எதுவும் செய்ய முடியாது

நமக்கு சமமான புரிதல் கொண்டவர்களுக்கு மட்டுமே நான் கூறுவது புரியும் மற்றவர்களுக்கு என்னுடைய பதிவு வெறும் தமிழ் எழுத்துக்கள் மட்டுமே

இன்று பிராமணர்கள் என்று அறியப்படும் அனைவரும் ஓரே மரபு வழி வந்தவர்கள் கிடையாது



No comments:

Post a Comment