Friday 29 April 2016

திருமுருகன் பூண்டி கிரைய சாசனம்

வரலாற்றில் பல இடங்களில் கழஞ்சு என்ற பொன் நாணயம் குறிக்கப்படும்

இதனை ஒரு பொன் என்றும் அழைப்பார்கள்.
ஒரு பொன் என்பது 4.4 கிராம் எடையுடையதாக இருக்கும்.

கொங்கு சோழர்கள் ஆட்சி விழ்ச்சி அடைந்து நாய்க்கர் ஆட்சி ஏற்படும்போது நாய்க்கர்கள், கொங்கு சோழன் உடனடியாக 25,000 பொன் வரி செலுத்தவேண்டும் இல்லையென்றால் திருமுருகன்பூண்டியை(தலைநகரம்) விட்டு வெளியேற வேண்டும் என்று ஆணை பிறப்பித்துவிடுவார்கள்.

அதாவது 25,000 X 4.4 கிராம் = 1,10,000 கிராம்
அதாவது 1,10,000 / 8 கிராம் = 13,750 சவரன் (பவுன்)
கிட்டதட்ட 14 ஆயிரம் பவுன் தேவை

அவர்களிடம் 10,000 பொன் அல்லது 5,500 சவரன் மட்டுமே கைவசம் இருந்தது அவ்வளவு பெரிய தங்கத்தை செலுத்த முடியாமல் சோழன் தடுமாறுவான்.

இன்னும் 15,000 பொன் தேவை

இந்த இக்கட்டான நிலையில் சோழர்களிடன் எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் எந்த நிபந்தனையின்றி தானாக முன்வந்து எழுமாத்தூர் பனங்காடன் கோத்திரம், ஆந்தை கோத்திரம், செல்ல கோத்திரத்தை சேர்ந்த மூன்று போர் தங்களிடம் இருந்து ஆளுக்கு 5,000 பொன்னை போட்டு சோழருக்கு பற்றாக்குறையாக இருந்த 15,000 பொன்னை வழங்கினார்கள்

அதாவது
5000 பொன் X 4.4 கிராம் = 22,000 கிராம்
22,000 கிராம் / 8 கிராம் = 2,750 பவுன் (சவரன்)

அதாவது கிட்டதட்ட மூன்றாயிரம் பவுன் ஆள் ஒன்றுக்கு கொடுத்து சோழர்களின் இடர் நீக்குவார்கள்

மூன்றாயிரம் பவுன் என்பது இன்றைய நாளையில் எவ்வளவு பெரிய தொகை என்று நினைத்துபாருங்கள். இவ்வளவு பெரிய தொகையை யாராவது சும்மா தூக்கி கொடுத்துவிடமாட்டார்கள்.

ஆனால் அன்று அந்த மூன்று நபர்களும் சோழனின் இடர் நீக்க ஆளுக்கு மூன்றாயிரம் சவரன் எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் கொடுத்தார்கள் என்றால் அது மிகவும் போற்றபட வேண்டியது.

அதே சமயம் இவர்களின் ஈகை பண்பை மதித்த சோழன் இவர்களின் இந்த உதவிக்கு நன்றி பாராட்டும் விதமாக

1. பனங்காடன் கோத்திரத்தாருக்கு திருமுருகன்பூண்டி காணியையும்

2. ஆந்தை கோத்திரத்தாருக்கு பழங்கரை காணியையும்

3. செல்லன் கோத்திரத்தாருக்கு தொரவலூர் காணியையும்

கிரையம் எழுதிக்கொடுப்பார்கள்.

காணி என்பது இன்றைய நாளில் ஒரு கிராம பஞ்சாயத்து அளவு பரப்பு இருக்கும் நிலப்பகுதி

அவ்வாறு அவர்களுக்கு கிரையம் எழுதிக்கொடுத்த பட்டையம் இன்றும் திருப்பூர் விஜயாபுரம் மணிகாரர் வீட்டில் உள்ளது.

இதன் நகல் தஞ்சை சரஸ்வதி ஓலைசுவடி காப்பகத்தில் ஒன்றும். ஈரோடு கலைமகள் கல்விநிலைய அருங்காட்சியகத்தில் ஒன்றும் உள்ளது.

இந்த பட்டையத்தை எழுத்தாளர் திரு.ராமசந்திரன் ஐயா அவர்கள் பார்வையிட்ட போது எடுத்தபடம். உடன் இருப்பவர் விஜயாபுரம் மணிகாரர் வாரிசு திரு.சிவக்குமார் அவர்கள்.

எழுத்தாளர் திரு.ராமசந்திரன் ஐயா அவர்கள் சென்னையில் South Indian Social History Research Institute (SISHRI) என்ற கல்வி நிறுவனத்தை நடத்தி வருகிறார்



No comments:

Post a Comment