Thursday 28 April 2016

ஆகமத்தின் காலம்





சமணத்தின் எழுச்சிக்கு பிறகுதான் ஆகமங்கள் சிறப்பு பெற்றது என்று சில அறிஞர்கள் எழுதுகிறார்கள்

இது அடிப்படையில் தவறு

காரணம் இறைவனின் லட்சணங்கள் ஆகமத்தில் மட்டுமே கூறப்படுகிறது

அதிலும் குறிப்பாக தட்சிணாமூர்த்தி லட்சணம் சிவாகமத்தில் மட்டுமே கூறப்படுகிறது

"ஆல் அமர் கடவுள் அன்ன நின் செல்வம்" புறம்-198

இதில் தட்சிணாமூர்த்தி கூறப்பெறுகிறார்

"ஆல்மர செல்வன் அணிசால் பெறுவிறல்" கலித்தொகை-87

இதில் தட்சிணாமூர்த்தி லட்சணம் கூறப்பெறுகிறது

"ஆல்மர் செலவற் கமார்ந்தனன் கொடுத்தாய்" சிறுபணாற்றுபடை-96,97

இதில் தட்சிணாமூர்த்தி கூறப்படுகிறார்

"தணிவுற்த தாங்கிய தனிநிறை சலதாரி(கங்கையை சூடியவன்) மணி மிடற்றணணல்"- பரிபாடல் 9 6/7

இந்த பாடலில் கங்கையை சூடிய வடிவம் கூறப்பெறுகிறது

"கொன்றை தாரன்"-புறம் 1

"செவ்வன் அன்ன மேனி"அகம்-1

இன்னும் இருக்கு அத்துடன் புறநானூறில் வேதத்தின் ஆறு அங்கமும் கூறப்பெற்று இறை லட்சணம் கூறப்படும்

ஆக சங்க காலத்தில் அதாவது சமணத்தின் எழுச்சிக்கு முன்பு இங்கு ஆகம வழியில் வழிபாடுகள் மிகவும் சிறப்புற்று இருந்தது என்பதை அறியலாம்




ஆகமம் என்பது வாகனம் போன்றது

வேதம் என்பது எரிபொருள் போன்றது

ஆகமம் என்ற வாகனத்தில் ஏறினால்தான் இறை என்பவன் இருக்கும் இடத்தை அடையமுடியும்

வெறும் எரிபொருளை மட்டும் வைத்துக்கொண்டு அதுதான் பெருசு அதனால் வாகனத்தில் ஏற மாட்டேன் என்று சொல்லுவது எதனால்

கோடி லிட்டர் எரிபொருள் இருந்தாலும் பயன் இல்லை

எரிபொருள் இல்லாத வாகனத்தினாலும் பயன் இல்லை

No comments:

Post a Comment