Thursday 28 April 2016

வெள்ளாளரில் இருக்கும் நான்கு வர்ணம்

"சாதூர் வர்ணஸ குலோத்பவ ஸர்வலோஹிதார்த்தாய"

என்ற ஸ்லோகம் உள்ள வெள்ளாளர்களின் மெய்கீர்த்தி கல்வெட்டுகள் பற்பல சோழர்களின் ஆட்சிகாலத்தில் கிடைக்கும்

அதாவது வெள்ளாளர்கள் நான்கு வர்ணங்களாய் உதித்து சகல உலகையும் காப்பவர்கள் என்று பொருள்

அவ்வாறு நான்கு வர்ணங்களாய் உதித்தவர்களுக்கு வெவ்வேறு ஏர் கலப்பை சொல்லப்படுகிறது

அந்த ஏர்கலப்பை எந்த மரத்தில் செய்ய வேண்டும் என்பது முதற்கொண்டு ஆகமங்களில் பேசப்படுகிறது

சரி வெள்ளார்களை கொண்டாடும் ஆகமங்கள் ஏன் பிரகஸ்பதியை கொண்டாடுவதில்லை

இதற்கான விடை கிடைக்கும்போது தமிழக வரலாற்றில் நிலவும் பல்வேறு குழப்பங்கள் முடிவுக்கு வரும்

படம்: காமிக ஆகமம்




கடந்த 07/07/2015 அன்றைய பதிவில் வெள்ளாளரில் இருக்கும் நான்கு வர்ணங்களை கூறியிருந்தேன் 

பிராமணர்களுக்கு= திரு மேழி
க்ஷத்திரியர்களுக்கு= சித்திர மேழி
வைசியருக்கு= பொன் மேழி
சூத்திரருக்கு= மேழி

என்று பதிவு செய்திருந்தேன் ஆனால் "காமிக" ஆகமத்தின் படி

இறைவனுக்கு பொன் சொல்லப்படுகிறது

பிராமணருக்கும் க்ஷத்திரியருக்கும் வெள்ளியும்

வைசியருக்கும் சூத்திரருக்கும் இரும்பும் சொல்லப்படுகிறது

எனது கருத்து இங்கு முரண்படுகிறது

அத்துடன் இங்கு மற்றொன்றையும் கவனிக்க வேண்டும்

சோழன் ஆகமங்களை தலையில் தூக்கிவைத்து கொண்டாடிய அளவுக்கு சேரனோ பாண்டியனோ பல்லவனோ கொண்டாடமல் போனது ஏன்

பல்லவனிடமும் பாண்டியனிடமும் ஆபஸ்தம்ப சூத்திரமே சிறப்பு பெற்று இருந்தது

சோழன் வெள்ளாளன் என்பதினாலேயே ஆகமங்களை தலையில் வைத்து கொண்டாடியுள்ளான்

ஆகமங்களை படிக்கும் போது அப்பட்டமாக தெரிகிறது

No comments:

Post a Comment