Thursday 28 April 2016

யார் உண்மையான க்ஷத்திரியர்கள்?

யார் உண்மையான க்ஷத்திரியர்கள்?

இன்று இருக்கும் பல ஜாதிகள் தங்களை க்ஷத்திரியன் என்று கூறிக்கொண்டு திரிகின்றார்கள். ஆனால் இவர்கள் அனைவரும் 16 ஆம் நூற்றாண்டுக்கு பிறகே தங்களை க்ஷத்திரியர் என்று கூறி புராணம் எழுதிக்கொண்டார்கள். ஆனால், சோழனின் ஆட்சி காலத்தில் இவர்கள் உண்மையான க்ஷத்திரியர்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

அப்ப யார் உண்மையான க்ஷத்திரியர்கள், சோழர்களின்ஆட்சி காலத்தில் க்ஷத்திரியர்கள் என்று கல்வெட்டுள் யாரை கூறுகிறது என்று பார்ப்போம்.

சோழனின் ஆட்சி காலத்தில் சித்திர மேழி நாட்டார்கள் (வெள்ளாளர்கள்) மெய் கீர்த்தி பொறிக்கப்பட்ட கல்வெட்டக்கள் 200-க்கும் மேற்பட்டவைகள் கிடைக்கின்றன. மேழி என்றால் ஏர்கலப்பை என்றுபொருள். சித்திர என்றால் தெய்வதன்மை பொருந்திய என்று பொருள்.

சரி இந்த சித்திர மேழி நாட்டார்களை கல்வெட்டுகள் என்ன சொல்லுகிறது என்று பார்ப்போம்.

---- * * * ----

"Sri மத் பூதேவி புத்ராநாம் ஸாதூர் வர்ணஸ குலோத்பவ ஸர்வலோஹிதார்த்தாய சித்திர மேளஸ்ய ஸாஸநம்"

"ஜகதா மேதத் பாலநம் ராஷ்ட்ர போஷணம்"

"Sri பூதேவிக்கு மக்களாகி நிகழச் செந்தமிழ் வடகலை தெரிந்துணர்ந்து நீதி கேட்டு நிபுணராகி அறம் வளர கலி மெலிய புகழ் பெறுக மனு நெறி தழைக்க செங்கோலே முன்னாகவும் சித்திர மேழியே தெய்வமாகவுஞ் செம்பொற் பசும்பையே வேலியாகவும் க்ஷமையினோடு கருனையேய்தி சமைய தன்மம் இனிது நடாத்துகின்ற பெருங்காளரோம்"

---- * * * ----

என்று வெள்ளாளர்கள் பற்றிய மெய்கீர்த்தி தென்னிந்தியா முழுவதும் பரவலாக காணப்படுகிறது

அதாவது, நான்கு வர்ணங்களாய் உதித்து சர்வ உலகத்தையும் காக்கின்றவர்கள் என்றும் சமஸ்கிருதத்தையும் செந்தமிழையும் நன்கு கற்று தேர்ந்து செங்கோலை முன் நிறுத்தி மனு நெறி தழைக்க நீதி செலுத்துகின்றவர்கள் என்று கூறுகிறது.

செங்கோல் க்ஷத்திரியர்களுக்கு உரியது என்பது குறிப்பிடதக்கது. மேற்கண்ட சமஸ்கிருத ஸ்லோகங்கள் வெள்ளாளர்கள்தான் உண்மையான க்ஷத்திரியர்கள் என்று தெளிவாக கூறுகின்றது. இந்த வெள்ளாளர்களில் இருக்கும் நான்கு வர்ணங்களை பற்றி கடந்த பதிவுகளில் விளக்கியுள்ளேன் ஆகையால் க்ஷத்திரியர்களை பற்றி மட்டும் இங்கு பார்ப்போம்

1).வெண்கொற்றகுடை
2).வெண்சாமரம்
3).வெண்சங்கு
4).அணங்குடை முரசு
5).ஏர் கலப்பை
6).வாள்
7).வில் அம்பு
8).ஆழி சக்கரம்
9).பூர்ண கும்பம்

போன்றவற்றவை சித்திர மேழி நாட்டார்களுக்கு உரியது என்று கீழ்கண்ட கல்வெட்டுகளின் வாயிலாக தெளிவாக அறிய முடிகிறது. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது ஆழிச்சக்கரம்

இந்த சக்கரம் கிருஷ்ணர் கையில் இருக்கும் சக்கரம் போன்ற ஒருவகை ஆயுதம். இதனை பரம க்ஷத்திரியர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். இந்த கல்வெட்டில் ஆழிச்சக்கரம் வெள்ளாளர்களுக்கு உரியதாக காட்டப்படுவதிலிருந்து வெள்ளாளர்கள்தான் பரம க்ஷத்திரியர்கள் என்பது உறுதி.

அது மட்டுமில்லை வெள்ளாளர்கள் வலங்கை க்ஷத்திரியர்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இன்று தாங்கள் க்ஷத்திரியர்கள் என்று பிதற்றும் மற்றவர்கள் அனைவரும் போலி க்ஷத்திரியர்கள்

"எத்தனை காலந்தான் ஏமாற்றுவார்கள் இந்த நாட்டிலே இந்த நாட்டிலே"

"சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார்"

என்ற பாடல்கள்தான் நினைவிற்கு வருகிறது



No comments:

Post a Comment