Thursday 28 April 2016

வண்ணக்கன் தேவன் சாத்தன்

கல்வெட்டு ஆய்வாளர் ராமச்சந்திரன் ஐயா, வரலாற்று ஆய்வாளர் நந்தர் மற்றும் நண்பர் சிவக்குமாருடன் அறச்சலூர்(அற சாலை ஊர்) கல்வெட்டை காண நேற்று சென்றோம்

ரம்மியமான வனப்பகுதியுடன் கூடிய குகைத்தலம்

இங்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உயரிய கல்வி போதிக்கப்பட்டுள்ளது

"அற சாலை ஊர்" என்னும் பெயரை கூறும் போதே அங்கு அறம் சார்ந்த கல்வி போதிக்கப்பட்டிருக்கு என்பதை உணர முடிகிறது

இதனை மறைய என்ற கல்வெட்டு வாசகமும் உறுதிபடுத்துகின்றது
இந்த கல்வெட்டை பலர் பலவிதமாக வாசித்துள்ளார்கள்

ராமச்சந்திரன் ஐயா அவர்களின் வாசிப்பு
"எழுத்து புனர்த்தான் மறயை
வண்ணக்கன் தேவன் சாத்தன்"

இந்த வாசகம் இசைகல்வெட்டுடன் சேர்த்து கிடைக்கிறது

உலகிலேயே 1700 வருடங்களுக்கு முன்பு கிடைக்கும் இசை கல்வெட்டு என்ற பெருமையை இது நமக்கு பெற்று தருகிறது

இந்த கல்வெட்டை வண்ணக்கன் குலத்தை சேர்ந்த தேவன் சாத்தன் என்பவன் தொகுத்து கொடுத்துள்ளான்





No comments:

Post a Comment